ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா? வடுகர்களா?

நாடாண்ட தமிழ் ஜாதியினரையெல்லாம் அடிமைப்படுத்தி, அவர்களிடையே ஜாதிச் சரக்குகளை மூட்டிவிட்டுத் தீண்டாமை, காணாமை என்னும் கொடிய வழக்கங்களைப் புகுத்தியவர்கள் ஆரியர்கள் அல்லர். வந்தேறிகளாய் ஆள வந்த கன்னட, தெலுங்கு வடுகர்களே! தமிழர்கள் ஜாதியில் கெட்டு வீழவும், தாழ்வு மனப்பான்மையில் தாழவும், உதிரி மயமாகவும் அவர்களே காரணமானவர்கள்.
ஆரியத்தின் புதிய அடியாளாய் ஆர்ப்பறித்து நிற்கும் குணாவின் குற்றச்சாட்டே இது. இதைப் பைத்தியக்காரத்தனம் என்பதா? அயோக்கியத்தனம் என்பதா? மோசடித்தனம் என்பதா? பித்தலாட்டம் என்பதா? அல்லது ஒட்டுமொத்தமாய் அனைத்தும் என்பதா? இப்படி ஓர் உளறல், சதிவேலை வேறு என்ன இருக்க முடியும்?
நான் முன்னமே குறிப்பிட்டதுபோல, இவர் நூல் எழுத வந்த நோக்கமே தமிழர்கள் வீழ்ந்தது எதனால் என்பதை ஆராய அன்று. ஆரியத்தின் பழியைத் துடைத்து, அவர்களுக்கு ஆதரவாய் நின்று, அவர்களின் முதன்மை எதிர்ப்பாளர்களான திராவிடக் கட்சியினரைக் களங்கப்படுத்தி, தமிழர்கள் அவர்களை வெறுக்கும் படிச் செய்து, மாறாக தமிழர்கள் ஆரியத்தை ஏற்கும்படி செய்யும் ஒரு வஞ்சகத் திட்டத்துடனே என்பது இந்தக் குற்றச்சாட்டின் வழி மிகத் தெளிவாக தெரிகிறது!
ஜாதியற்ற தமிழ்ச் சமுதாயத்தில் ஜாதியை உருவாக்கி, தனக்குப் பாதுகாப்பையும், தன் ஆதிக்கத்திற்கு ஒரு உறுதித் தன்மையையும் ஏற்படுத்திக் கொண்டவர்கள் ஆரியர்கள்  என்பதற்கு அடுக்கடுக்காய் ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அத்தனையையும் அறவே மறைத்து தெலுங்கு வடுகர்களே ஜாதிக்குக் காரணம் என்று ஒரு புது பொய்யைச் சொல்லி, ஆரியத்தை களங்கத்தினின்று மீட்டு, காக்க நினைக்கிறார். இப்படி கூறுகின்றவர் அதற்கான ஆதாரங்களை விளக்கங்களை அளிக்க வேண்டும். அதையெல்லாம் எதையும் தராது இவர் கூறுவதெல்லாம் ஏதோ தெய்வ வாக்கு என்பதுபோல குற்றச்சாட்டுகளையும் செய்திகளையும் கூறிச் செல்கிறார்.
ஆரியப் பார்ப்பனர்கள் தமிழரிடையே இருந்த தொழிற் பிரிவுகளை ஜாதிப் பிரிவுகளாக எப்படி மாற்றினர் என்பதையும், நம்மிடையே இருந்த நன்றி வழிபாட்டை கடவுள் வழிபாடாக எவ்வாறு மாற்றினர் என்பதையும் முன்னர் விளக்கியுள்ளேன். ஆரியர்களே ஜாதியை உருவாக்கியவர்கள், நிலைநிறுத்திப் பாதுகாத்தவர்கள், அதன் பலனையும் அடைந்தவர்கள், அவர்கள் சுயநலத்திற்காகவே அதைச் செய்தார்கள் என்பதை இனிச் சுருக்கமாகக் காண்போம்.
மௌண்ட்யம் ப்ரணாந்தி கோதண்ட - ப்ராஹ்மணானும் விதியதே
இதரேஷாம்து, வர்ணான மதண்ட்; ப்ராணாந்தி கோபவதே - மனுஸ்மிருதி
இதன் பொருள் கொலைத் தொழில் புரிந்த பிற ஜாதிக்காரர்களைத் தூக்கிலிட வேண்டும். ஆனால் பிராமணன் (ஆரியன்) கொலைக் குற்றம் செய்தால் அவனது தலை மயிரை மொட்டையடித்தால் மட்டுமே போதும். அதுவே அவனுக்குரிய தண்டனை.
அதாரரூணாமதனம் வருத்வாயோ ததாதீத தர்த்தீனே
ஸவை போஷண ஜாத்பாத் முக்தே பவதிதந் க்ஷணம்
இதன் பொருள் பிறருக்குக் கொடுக்காத கருமியின் பொருளைக் கொள்ளையிட்டுப் பிராமணனுக்குக் கொடுக்கிறவன், அக்கணமே அத்திருட்டினால் உண்டான பாவத்தினின்றும் விடுதலை அடைகிறான்.
ச்ராந்தஸம் வாஹனம் ரோகி பரிசர்யா சுரார்ச்சனம்
பாதசௌமத்வி ஜோச்சிஷ்ட மார்ஜனம் கோப்ரதானவத்
இதன் பொருள் : களைப்புற்ற பிராமணன் உடலைத் தடவுடல், நோய்வாய்ப்பட்ட பிராமணனுக்குத் தொண்டு செய்தல், பிராமணன் வந்தவுடன் அவனது கால்களை அலம்பி விடுதல், பிராமணன் உண்ட இடத்தைச் சுத்தம் செய்தல், இவைகளைச் செய்கின்றவர்களுக்குப் பெரும் பயன் கிடைக்கும். நாத பரதரம் தர்மோ ந்ருபாணாம் யத்ரணார்கிதம்,
விப்ரோப் யோதீயதே தீரவ்யம் - (யாக்ஜவல்கியர்)
இதன் பொருள் சண்டையில் பகைவர்களைக் கொன்று, அவர்களின் பொருட்களைக் கைப்பற்றி, அவைகளை அரசனானவன் பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வதற்கு ஒப்பான தர்மம் வேறொன்றும் இல்லை.
நவிஷம் விஷமித்யாஹீட்ர் பரஹ்மஸ்வம் விஷமுச்சயதே;
விஷமேகாகினம் ஹிந்தி ப்ரஹ்மஸ்வம் புத்ர பௌத்ரகம்
இதன் பொருள் விஷமானது அதை உட்கொண்டவனை மட்டுமே கொல்லும் அதைவிட பெரிய விஷம் பிராமணனுடைய பொருள். ஏனென்றால் பிராமணனுடைய பொருளை எவன் ஒருவன் கைப்பற்றுகிறானோ அவனை மட்டுமின்றி அவன் குலத்தையே அது நாசம் செய்து விடும்.
பிராம்மணோ நஹிம் ஸிதவ்ய
இதன் பொருள் பிராமணன் எக்குற்றம் புரிந்தாலும் அவனது உடலை வருத்தக் கூடாது. இவையனைத்தும் ஆரியர்கள் தங்களுக்குச் சாதகமாக எழுதியுள்ள சாஸ்திரங்கள். இச்சாத்திரங்கள் ஆரியர்கள் தாங்கள் பிரித்த ஜாதித் தர்மத்திற்காக எழுதப்பட்டவை. இவற்றை நன்கு கவனித்துப் பாருங்கள். அப்போது புரியும் ஜாதி யாரால் பிரிக்கப்பட்டது; யார் நன்மைக்காகப் பிரிக்கப்பட்டது; இந்தச் சாஸ்திரங்கள் யார் நன்மைக்காக எழுதப்பட்டவை என்பது.
பிராமணன் பொருளை ஒருவன் பறித்தால் அப்பாவம் பறித்தவனை மட்டுமல்ல, பறித்தவன் தலைமுறையையும் பாதிக்கும்; பிறரிடம் பறிக்கப்பட்ட பொருளைப் பிராமணனுக்குக் கொடுத்தால், அதனால் உண்டான பாவம் நீங்கும்; மற்றவர்கள் கொலை செய்தால் கொலைத் தண்டனை. ஆனால், ஆரியர்கள் (பிராமணர்கள்) கொலை செய்தால் அவர்கள் தலைமயிரை நீக்கினால் போதும் என்று ஒரு ஜாதி தர்மம் கூறுகிறான் என்றால், அந்த ஜாதியும், ஜாதித்தர்மமும் யாரால் உருவாக்கப்பட்டது என்பதற்குப் பெரிய ஆய்வு நடத்த வேண்டுமா? தமிழர்களே சிந்தியுங்கள்!
குறுக்குசால் குணா அவர்களே இப்போது சொல்லுங்கள் ஜாதியை உருவாக்கியவர்கள் ஆரியர்களா, அதை வளர்த்தவர்கள் காத்தவர்கள் ஆரியர்களா? அல்லது தெலுங்கு வடுகர்களா? நாங்கள் கூறுவதற்கு, அது சரியென்பதற்குச் சில ஆதாரங்களை மட்டுமே காட்டியுள்ளோம், தேவைப்பட்டால் நூற்றுக்கணக்கான ஆதாரங்களைக் காட்ட முடியும். ஆனால், உங்களுடைய குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம், அறிவு நாணமிருந்தால் காட்ட வேண்டும்.
வேண்டுமானால் அக்கால ஆட்சியாளர்கள், ஆரிய மாயையில் மதிமயங்கி, அவர்களின் பேச்சைக் கேட்டு ஜாதியை வளர்க்க துணைபோய் இருப்பார்களே தவிர ஜாதியை உருவாக்கியவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல. அதைச் செய்தவர்கள் ஆரியர்கள் மட்டுமே!
அடுத்து, தமிழர்கள் ஜாதியில் கெட்டு வீழவும், தாழ்வு மனப்பான்மையில் தாழவும், உதிரி மயமாகவும் தெலுங்கு வடுகர்களே காரணம், ஆரியர்கள் அல்ல என்ற அபாண்ட புளுகையும் சொல்கிறார் குணா. குணாவைப் பார்த்து நான் கேட்கும் ஒரே கேள்வி மனுஸ்மிருதியை எழுதியவர்கள் ஆரியர்களா? தெலுங்கு வடுகர்களா?
மனுஸ்மிருதி ஆரியர்களால் எழுதப்பட்டது; அவர்களின் நலனுக்காக எழுதப்பட்டது என்பதை மடையன்கூட மறுக்க மாட்டான். அந்த அளவிற்கு அசைக்க முடியாத உண்மை. அந்த மனுஸ்மிருதி கூறும் சில கருத்துக்களைப் பாருங்கள்!
பிராமணன் (ஆரியர்) கூலி கொடுத்தோ, கொடாமலோ சூத்திரனை (தமிழனை) வேலை வாங்கலாம். ஏனெனில் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் (தமிழன்) பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறான். - (மனு  - அத்தியாயம் - 8 சுலோகம் - 413)
சூத்திரன் (தமிழன்) தேடி வைத்துள்ள செல்வத்தைப் பிராமணன் (ஆரியன்) தடையின்றிக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஏனெனில் அடிமையாகிய சூத்திரன் எவ்வகையிலும் செல்வத்திற்கு உரியவனாக மாட்டான்.
- (மனு - அத்தியாயம்-  8 சுலோகம் - 417)
பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டுப் பொய்ச் சொன்னாலும் குற்றமில்லை. பிராமணரல்லாதாரைக் கொன்றாலும் குற்றமில்லை.
- (மனு - அத்தியாயம் - 8 சுலோகம் - 112, 143)
பிராமணனைச் சூத்திரன் திட்டினால் அவனது நாக்கினை அறுக்க வேண்டும். பிராமணனுடைய ஜாதிப் பெயர்களைச் சொல்லித் திட்டும் சூத்திரனது வாயில் காய்ச்சிய இரும்புக் கம்பியை எரிய எரிய செருக வேண்டும்.
- (மனு - அத்தியாயம்-  8 சுலோகம் - 270, 271)
சூத்திரன் ஆரியரை (பிராமணரை) அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும்.
- (மனு - அத்தியாயம் - 8 சுலோகம் - 280)
இப்படிப்பட்ட ஆரிய மனுநூலையே ஆரியர்கள் உருவாக்க வில்லை என்ற ஒரு அண்டப்புளுகையும் கூறி ஆரியத்தை தூய்மைப்படுத்த துடிக்கிறார் குணா.
மனுஸ்மிருதி யாரால் எழுதப்பட்டது?
ஆரியப் பார்ப்பனர்களை ஆதரிப்பதிலும், தாங்கிப் பிடிப்ப திலும், காப்பாற்றுவதிலும் குணா காட்டும் ஆர்வம், தீவிரம், முனைப்பு இவற்றின் உச்சக்கட்டம், மனுஸ்மிருதி ஆரியர்களால் எழுதப்பட்டதல்ல என்று அவர் கூறும் மோசடி செய்தி. பிராமணிய கொடு நெறிகளைச் சட்ட வடிவமாக்கிய மனுநூல் (மனுஸ்மிருதி) ஆரியர்களால் ஆக்கப்பட்ட நூல் அன்று. அது கி.பி. 5ஆம் நூற்றாண்டு அளவில் சாளுக்கியப் பேரரசனாகிய இரண்டாம் புலிகேசி அவையில் அரங்கேற்றப் பட்ட சட்ட நூல். மானவக்குலம் என்பது சாளுக்கியரையே குறித்தது. மானவத் தருவநூல் எனப்பட்ட மனுநூல் இதனால் சாளுக்கியரென்னும் கன்னடப் பேரரசனால் ஆக்கிய நூலேயாகும். இதுவே மனுஸ்மிருதி பற்றி குணாவின் ஆய்வு அறிக்கை!
இது ஆய்ந்து கூறப்பட்டதல்ல; மாறாக, நுனிப்புல் மேய்ந்து கக்கியது ஆகும்.
பிராமணியக் கொடு நெறிகளைச் சட்ட வடிவமாக்கிய மனுநூல் என்று கூறிவிட்டு, பின் அதை அது ஆரியர்களால் (பிராமணர்களால்) எழுதப்பட்டதல்ல என்றால் இது மோசடி அல்லவா? முரண் அல்லவா? பிராமணர்களுக்காக, அவர் உயர்வுக்கு, நலத்திற்கு, பாதுகாப்பிற்கு எழுதப்பட்ட நூலை வேறு யார் எழுதுவார்கள். இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் பெரிய ஆய்வாளரைப் போல பேனா பிடிப்பது வெட்கக் கேடல்லவா?
ஆனால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள், மனுநூல், மகத நாட்டில் ஆட்சி புரிந்த புஷ்யமித்திர சுங்கன் என்னும் ஆரிய மன்னன் காலத்தில் முதன்முதலாக மனுஸ்மிருதி சட்டமாக்கப்பட்டது என்கிறார். இந்த புஷ்யமித்ர சுங்கன் பரத்வாஜ் கோத்திரத்தை (குலம்) சேர்ந்தவன். கே. பி.  ஜெய்ஸ்வால் என்னும் ஆய்வாளரும் இவன் புரோகிதக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்கிறார்.
இவன் பௌத்த மத எதிரி. இவன் காலத்தில் பௌத்தம் சீரழிக்கப்பட்டது. இவன் பல பௌத்தர்களைக் கொன்றதோடு பௌத்த மடங்களையும் தகர்த்தான்.
திவ்விய வதனம் என்ற பௌத்த நூல் இச்செய்திகளைக் கூறுகிறது.
மேலும், பண்டைய இந்தியாவில் மனு என்ற பெயருக்கு ஒரு மரியாதை (கவுரவம்) இருந்ததால் இதையும் மனு எழுதியதாக ஆரியர்கள் கூறினர். உண்மையில் இந்த ஸ்மிருதி மனு என்பவரால் எழுதப்படவில்லை. அக்கால வழக்கப்படி மனுஸ்மிருதிகள்  -பிரிகு என்ற குடும்பப் பெயரால் குறிக்கப் பட்டிருக்கிறது; ஒவ்வொரு ஸ்மிருதிகளின் இறுதியிலும் பிரிகு என்ற பெயர் சுட்டப்பட்டிருக்கிறது என்பதை அம்பேத்கர் விளக்குகிறார்.
மனுஸ்மிருதியை எழுதிய ஆசிரியர் உண்மையில் சுமதி பார்க்கவா என்பவரே. கி. மு. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாரத ஸ்மிருதியை எழுதியவரும் இவரே. மனுஸ்மிருதியின் காலம் கி.மு. 170க்கும் 180க்கும் இடைப்பட்ட காலம் என்பதும் அம்பேத்கரின் முடிவு. - (ஆதாரம் : திருப்பூர் சமூகநீதி பதிப்பகம் வெளியிட்டுள்ள பார்ப்பனீயத்தின் வெற்றி, பக்கம் 12, 13)
சங்க இலக்கியத்திலே மனுநீதிச் சோழன் குறித்த குறிப்புகள் இருக்கின்றன (புறம் 39 5, 6). சிலப்பதிகாரத்திலும் (20:53 55; 29 2), மணிமேகலையிலும் (22:210) மனுநீதிச் சோழன் பற்றிய குறிப்பு உள்ளது.
குலோத்துங்கனுக்கு முந்திய மன்னர்களாகிய இராஜகேசரி இராஜ மகேந்திரனின் பிரசாநிதியில் காணப்படும், தருமநெறி நிற்ப மனுநெறி நடத்திய கோவிராச கேசரி வர்மரான உடையார் ஸ்ரீ இராசமஹேந்திர தேவர் என்கிற வரிகளும், ஆதி இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் உள்ள, மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்புரகேசரி உடையார் ஸ்ரீ ஆதி இராசேந்திர தேவர் என்ற வரிகளும், வீரராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியிலுள்ள மனுநெறி விளக்கிய கோராஜகேசரிவர்மரான உடையார் ஸ்ரீ வீரராசேந்திர தேவர் என்கிற வரிகளும் குணாவின் கூற்று முற்றிலும் தவறு என்று எற்றி எறிந்து தள்ளுவதோடு, ஆரியத்தைக் காப்பாற்ற இவர் எடுத்த மோசடியையும் முகத்தில் உமிழ்ந்து நிறுவுகின்றன!
- (ஆதாரம் :மு.ஹ.சூடையமயவேய ளுயளவச.ஊடிடயச 246 K.A.Nilakanta Sastri.Cholar 246 
 து.அ. கோபிராதராவ், சோழ வமிச சாத்திரச் சுருக்கம்  அனுபந்தங்கள்)
தமிழரிடையே வலங்கை  இடங்கை முறையைத் தோற்றுவித்துத் தமிழரைக் கூறுபோட்டவன் குலோத்துங்கன் என்ற குணாவின் கூற்றும் தவறாகும். வலங்கை வேளக்காரப் படைகள் பற்றிய குறிப்பு முதலாம் இராசராசன் காலத்திலேயே கிடைக்கின்றது ((Stein,174).
மேலும், கர்நாடகத்திலும் பலகேய் (வலக்கை), எடகேய் (இடக்கை) என்ற பிரிவும், ஆந்திரத்திலும் காபுலு, பாஞ்சானுலு என்ற பிரிவும் இருக்கின்றன (ளுவந 174, 175). அப்படியாயின் அவர் களிடையே இப்பிரிவுகளைச் செய்தது யார்? எதற்காக இப்பிரிவு செய்தார்கள்? தமிழர்களைக் கூறுபோட இப்பிரிவு உருவாக்கப்பட்டிருக்குமானால், கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் இப்பிரிவுகள் எப்படி வந்தன? குழப்பல்வாதி குணா பதில் சொல்ல வேண்டும்!
நாயக்கர் ஆட்சி, பிராமணியத்தை உச்சி முகர்ந்து போற்றியது. பழந்தமிழர்மீது பொல்லாத ஜாதி முறைகளைப் (தீண்டாமை, காணாமை) புகுத்தியது என்று குணாவே கூறுகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜாதியை உருவாக்கிய ஆரியர்கள், ஆட்சியாளர்களை நெருங்கி, அவர்களைத் தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு ஜாதிக் கொடுமைகளையும், மனுஸ்மிருதிகளையும் நடைமுறைப்படுத்தினர் என்பதுதானே! எனவே, நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்கள் உருவாக்கினர் என்பது உண்மைக்கு எதிரான மோசடிக் கருத்தாகும்!
1971ஆம் ஆண்டு (Babu Rao Patel)  பாபுராவ் பட்டேல் அவர்கள் ஆடிவாநச “Mother India”யை எழுதிய பகுதியைக் கீழே படியுங்கள்.
“The Caste system was the life and soul of Brahminism. It was the most deadly and diabolical weapon of imperialistic domination ever invented by human brain. This weapon was used by the brahminism in the most wicked, ruthless and unpatriotic manner to maintain their power and superiority over others.”
அதாவது, ஜாதி முறையானது பிராமணியத்திற்கு (ஆரியத்திற்கு) உயிரும், உடலும் போன்றது. மக்கள் மேல் தங்கள் வல்லாண்மையை (ஆதிக்கத்தை) நிலைநாட்டிக் கொள்வதற்காக, உருவாக்கப்பட்ட மிகமிக அச்சமானதும், மிகக் கொடியதுமான படைக்கருவியே இச்சாதிமுறையாகும். தங்களது வல்லாண்மையையும், ஜாதி உயர்வையும் நிலைநாட்டிக் கொள்வதற்காகப் பிராமணர்கள் இதை மிகக் கொடுமையாகவும், இரக்கமற்ற முறையிலும், நாட்டுப் பற்றற்ற (தேச விரோத) முறையிலும் பயன்படுத்தி வந்துள்ளனர் என்கிறார்.
மேலும் இவர்,    “Inspite of its innumerable blood stained foot print on the sands of time, Brahaminism born in the midst of history still continues to  diminate and black mail the hindu race. Hindu history is still being puntulted by murder, devasation, destruction and suffering caused by the wicked, subtle and devilish designs of those who misues their birth, wealth and power”  என்கிறார்.
அதாவது, வரலாற்றின் இடையில் தோன்றிய பிராமணியம் (ஆரியம்) காலமெனும் மணல்வெளியில் எண்ணற்ற இரத்தம் தோய்ந்த காலடிகளைப் பதித்த பின்பும் தொடர்ந்து இந்துக்களின் மீது அதிகாரம் செலுத்தி கொள்ளையடித்தே வருகிறது. இரண்டகம் செய்கின்ற நயவஞ்சகர்களான  பேய்க்குணம் படைத்த பிராமணர்கள் (ஆரியர்கள்) தங்களின் பிறப்பு, செல்வம், அதிகாரம் ஆகிய அனைத்தையும் தங்களின் கொடிய திட்டங் களை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டு வருவதால், இந்துக்களின் வரலாறு இன்றும் தொடர்ந்து கொலை, கொள்ளை, கொடுமை போன்ற தீமைகள் நிறைந்ததாகவே இருந்து வருகின்றது... என்று மனம் நொந்து ஆரியப் பார்ப்பனர்களைப் பற்றி எழுதுகிறார்.
ஜாதி, மதம், தீண்டாமை, உயர்வு தாழ்வு, பலியிடுதல் போன்ற இழிவுகளுக்கு, கொடுமைகளுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி மனிதநேயச் சிந்தனையைப் பரப்பி, மக்கள் நலச்செயல்களைச் செய்து வந்த புத்த மதத்தினரை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியவர்கள் ஆரியர்கள்.
சந்திரகுப்த மௌரியரின் அமைச்சனாக நுழைந்த விஷ்ணு குப்தன் என்னும் கவுடில்லியர் (அர்த்த சாஸ்திரம் எழுதியவர்) என்னும் ஆரிய பிராமணன் புத்தத் துறவிகளையெல்லாம் அழித்தொழிக்க அடித்தளமிட்டான்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆரியர்களின் உதவியால் ஆட்சிக்கு வந்த புஷ்யமித்திரன் புத்த அமைப்புகளையெல்லாம் கொளுத்தினான். ஆரியர்களின் தூண்டலால் ஆயிரக்கணக்கான புத்தத் துறவிகளைக் கொன்று குவித்தான்.
இவனுக்கு அடுத்து விக்கிரமாதித்தன், கனிசுகன், கூண மரபைச் சேர்ந்த மிதிரகுலான் போன்றவர்களும் ஆரியர்களின் வற்புறுத்தலால் புத்தத் துறவிகளை அழித்தொழிப்பதையே முதன்மைப் பணியாகக் கொண்டு செய்தனர்.
இந்த ஆரியப் பார்ப்பனர்களின் சாதி வெறிக்கும், மனித விரோத செயலுக்கும் ஓர் எடுத்துக்காட்டினால் உங்களுக்கு விளங்கும் என்று எண்ணி அதைக் கீழே குறிப்பிட்டுள்ளேன் படியுங்கள்.
உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தண்ணீர், காற்று, உணவு ஆகியவை எங்களுக்கு (ஆரிய பிராமணர்களுக்கு) நன்மை பயப்பனவாகவும், எங்களால் வெறுக்கப்படுகின்றவர்களுக்குத் தீமை செய்வனவாகவும் ஆக வேண்டும். வேத, மிருதிகட்கு இணங்கி நடக்காதவர்களுக்கு இவ்வுலகம் நஞ்சாகப் போகட்டும். (யசூர் வேதம்), தமிழர்களே! இப்போது சொல்லுங்கள். இந்த மனித குலத்தின் எதிரிகள் ஆரியர்களா? மற்றவர்களா? மேலே கூறிய மனு போன்ற ஸ்மிருதிகளை ஏற்று அதன்படி ஆரியர்களுக்கு அடங்கி நடக்காத, மற்றவர்களுக்கெல்லாம் இவ்வுலகு நஞ்சாகப் போக வேண்டும் என்று வேத காலத்திலேயே வேண்டியிருக்கிறான் என்றால், தமிழர்களை எழவொட்டாமல் வீழ்த்தியது யார்? ஜாதியக் கட்டுகளைப் பூட்டி, அடிமைப் படுத்தியது யார்? தெலுங்கு வடுகர்களா? ஆரியப் பார்ப்பனர்களா என்பதை நடுநிலை நின்று தமிழ் மக்கள் சிந்தித்துத் தெளிய வேண்டும். குணா போன்ற ஆரிய அடிவருடிகளை அடையாளங் கண்டு ஒதுக்க வேண்டும்.
உண்மைகள் இப்படியிருக்க, தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டதால்தான், இனப்பற்றும், இனமானமும், இன நலமும் இழந்து சொந்த நாட்டிலேயே ஏதிலி (அகதி)களாக்கப் பட்டுள்ளனர்; சேரி மக்களாக்கப்பட்டுள்ளனர்... என்கிறார் குணா.
இது வெறும் உளறலா? பைத்தியக்கார உளறலா? பட்டிமன்றமே நடத்த வேண்டும்! சேரிகளும், தீண்டாமையும் எத்தனை நூற்றாண்டுகளாய் இருந்து வந்தவை. திராவிடம் என்ற சொல்லாட்சியைத் திராவிடக் கட்சிகள் எடுத்தாண்டது எப்போது என்ற எளிய சிந்தனைகூட இல்லாமல் உளறினால் இவர்களை என்வென்று சொல்வது! ஒரு நூற்றாண்டு காலமாகத்தான் திராவிடர் என்ற சொல்லைத் திராவிட இயக்கங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், சேரிப் பிரிவும், சேரி மக்களும் ஆரிய சகதியால் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டவை. அப்படியிருக்க, திராவிடத்தால்தான் சேரி மக்கள் ஒதுக்கப்பட்டனர், ஒடுக்கப்பட்டனர் என்பது உலகமகா உளறல்லவா!
நன்றாகக் கூர்ந்து ஆய்ந்தால், திராவிட இயக்கம் வந்தபின்தான் சேரி மக்கள் நிமிர்ந்தனர். மானம் பெற்றனர். கல்வி பெற்றனர், பதவி பெற்றனர், நல்ல பெயர்கூடப் பெற்றனர். அப்படி யிருக்க, திராவிடத்தால்தான் சேரி மக்கள் உருவாயினர், மானம் இழந்தனர், இனப்பற்று இழந்தனர் என்பது மோசடியின் மொத்த பிதற்றல் அல்லவா

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தந்தை பெரியாரும், தாழ்த்தப்பட்டோரும் - 1

பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன?